Showing posts with label வளையாபதி - TVR. Show all posts
Showing posts with label வளையாபதி - TVR. Show all posts

Friday, June 9, 2017

வளையாபதி - 2



மகன் தந்தையைத் தேடிச் சென்றான்

அவரைக் கண்டு, தான் அவரால் கைவிடப்பட்ட அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்றான்

தந்தையோ அவனை நம்பாமல் அவனை துரத்தியடிக்கிறார்

அவன் தந்தையை வீதிக்கு இழுத்துக் காளியை சாட்சியாக அழைக்கிறான்.தன் தாயின் கற்பினை நிலை நாட்ட வேண்டுகிறான்.காளியின் உதவியால் உண்மையைசெட்டி அறிகிறார்

பின் அவர் மகனை வீரவாணிபன் என்னும் பெயரிட்டு அவனை வாணிகணாகத் தொழில் தொடங்கவும் உதவுகிறான்

இதுதான் வைர வாணிகன் வளையாபதியின் கதைச் சுருக்கமாகும்

ஆனால் வளையாபதி என்ற பெயர் எச்செய்யுளிலும் சொல்லப் படவிலலை

இக்கதையின் தலைவன் சைவ ஐந்தெழுத்தை இறைவணக்க மந்திரமாகக் கொண்டவன். காளியும் ஒரு மையமானப் பாத்திரம்

ஆனால் கிடைத்துள்ள செய்யுள்களோ இது ஒரு சமணநூல் என தெரிவிக்கின்றன

வளையாபதி காத்தவராயன் கதையைப் புராணவடிவத்தில் சொல்லியுள்ளதாக கருதப்படுகிறது.மலையாளத்திலும், தமிழிலும் வழங்கும் காத்தவராயன் கதை சாதி வரம்பை மீறி மணப்பதால் ஏற்படும் துன்பங்களைக் கூறுவது.அதனால் இது ஒரு சமணக்காவியம் என்றும் கூறப்படுகிறது

கிடைத்துள்ள செய்யுள்களை வைத்துப் பார்க்கும் போது , உலக வாழ்வின் இன்பங்களை மறுத்து, துறவறம் போற்றுவதும்,பெண்களின் மீது பொதுவாக வெறுப்பையும் காட்டுவதாகத் தெரிகிறது

பெண் மறுப்பு,சிற்றின்பத் துறவு,புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை போன்றவற்றை இககவியம் கூறுவதால் ..இதன் ஆசிரியர் திறம் மிக்க சமணத் துறவியர் ஆவார்

(ஆதாரங்கள் மயிலை சீனி வெங்கடசாமியின் "மறைந்து போன தமிழ் நூல்கள்)

வளையாபதி - 1



ஐம்பெருங்காப்பியங்களில் நாங்காவதாய் சொல்லப்படுவது வளையாபதி ஆகும்.

வளையாபதியும், குண்டலகேசியும் பற்றி முழுதுமாகக் கிடைக்கவில்லையேயாயினும், வளையாபதியில் ஒன்றுமே கிட்டாமல் இல்லை

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அது தொலையாமல் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.தமிழ்த்தாத்தா எனப் போற்றப்படும் டாக்டர் உ.வே,சாமிநாத ஐயர் அவர்கள், ஒருமுறை திருவாவடுதுறை ஆதின மடத்தின் நூலத்திற்குச் சென்ற போது, வளையாபதியின் சுவடிகளை தம் கண்ணால் கண்டதாகவும், அப்போது, அவர் பழஞ்சுவடிகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாடஹ்தால் அதிப் புறக்கணித்து விட்டதாகவும், பின்னர், சுவடிகளைக் காக்கும் விருப்போடு அங்குச் சென்ற போது அவை காணவில்லை என்றும்..."என் சரித்திரம்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்

வளையாபதியின் ஆசிரியர், இயற்றப்பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர் ,ஆகியவை நமக்குத் தெரியவில்லை.ஆனால், அக்காவியத்தின் 72 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன

இது சமண சமய நூல் .தனியழகுள்ள நூல் என ஒட்டக்கூத்தரும் கருதியதாகத் தெரிகிறது.நூல் கிபி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் போது இயற்றப்பட்டிருக்கலாம்

வளையாபதியின் கதைச் சுருக்கம் இதுவே!

வைரவாணிப மகரிசிக் கோத்திரத்தைச் சேர்ந்தவனும், சிவ பக்தனும் ஆன நவகோடி நாராயணச் செட்டி என்பவனுக்கு இரண்டு மனைவியர்

ஒருத்தி, அவனது சாதியான வைசியச் சாதியைச் சார்ந்தவள்.மற்றொருத்தி வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவள்.

வேற்று சாதிக்காரியை மணந்ததால் நவகோடி நாராயணச் செட்டியின் சாதியைச் சேர்ந்தவர்கள் அவரை சாதியை விட்டு ஒதுக்கி வைக்க, அதனால் செட்டி தன் இரண்டாம் மனைவியை , அவள் கர்ப்பமாக இருந்த போதும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.

பின், செட்டியும் கடல் பயணம் செய்து, வாணீபத்தில் மேலும் பொருளீட்டி திரும்பி, தன் முதல் மனைவியுடன் இன்பமாக இல்லறம் நடத்துகிறான்

சில மாதங்கள் கழிந்தது..

அவனது இரண்டாம் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.அவனை அவள் வளர்த்து வருகையில், அவனின் நண்பர்கள், அவன் தகப்பன் பெயர் தெரியாடஹ்வன் என எள்ளி நகையாடி...அவனைத் துன்புறுத்துகின்றனர்

நாளி எனும் காளியின் வடிவமாகிய தெய்வத்தின் அன்பு கொண்ட அவன் தாய் , அவனது தந்தை யார் என்பதை அவனுக்குத் தெரிவிக்கின்றாள்

(தொடரும்)