Friday, March 20, 2020

சிலப்பதிகாரம் - 3

அரங்கேற்று காதை

ஆடல்மகள்
மாதவி
தோகை வளர்ந்த
பெண் மயிலாள்
புள்ளிமானாய்த் துள்ளும்
நடன மங்கை
அழகின் இலக்கணம்
பார்ப்போர்
மயங்கும்
அழகுடையாள்
ஓர் நாள்
சோழ மன்னன் முன்
அரங்கேறி
ஆடி நின்றாள்
காவலனும்
அதற்கென நடைமுறையாய்
இயல்பு வழுவாது
பச்சை
மாலையினையும்
"தலைக்கோலி'"
பட்டத்தினையும் அளித்திட்டான்.
அம்மாலையினை
கூனி
பெருந்தெருவில்
விற்க வர
கோவலனும்
ஆயிரம் பொன் தந்து
வாங்கினதுடனின்றி,
மாதவியின்
இல்லமும் சென்றனன்
கூனியுடன்..
குற்றமற்ற
தன் மனையினையும்
மறந்து
மாதவியிடன்
மாலை
தங்குபவனும் ஆயினன். 

No comments:

Post a Comment