Tuesday, March 24, 2020

சிலப்பதிகாரம்- 6

கடல் ஆடு காதை

இந்திரவிழாவால்
இன்ப வெள்ளத்தில்
புகார் நகரம்
சித்திரை மாதம்
சித்திரை நாள்..
இந்திரன் அவையின்
சாபத்தால்
புகார் புகுந்த
ஊர்வசி மரபில் வந்த
அழகு தேவதை
மாதவியின் நடனம்
ஊர் கூடி
காத்திருக்க
அவர்களை 
தன்
பதினோருவகை ஆடல்களால்
பரவசப்படுத்தத்
தயரானாள் அவள்
மக்கள்
மாதவியைக் கண்டதும்
மகிழ்ச்சி வெள்ளத்தில்..
நடனம் முடிந்ததும்
கோவலனுடன்
ஒன்றினாள்..
பின்..
சிறு ஊடல்
ஊடல்தானே
உடல் ஒன்ற
மேன் மேலும்
இனபம் அளித்திடும்
ஊடல் தீர்ந்து
உள்ளக் களிப்பில்
கூடினர்..
இரவு முழுதும்
இன்ப வெள்ளத்தில்
இருந்தவர்..
வைகறையில்
காவிரியின்
கடல் கலக்கும்
சங்கமத் துறையில்
கடல் நீராடினர்
மாதவியின் தோழி
யாழெடுத்து
கோவலனின்
கரங்களில் தந்திட
யாழ் மீட்டவனுடன்
இசைப்பாடலானாள்
இன்முகத்துடன்
மனம் நிறைய
இச்சையுடன்
இன்ப நாயகி


No comments:

Post a Comment