Saturday, March 21, 2020

சிலப்பதிகாரம் - 4


அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை- 4
-------------------------------------------------------------
இன்பமும்
துன்பமும்
மாறி மாறி வருவதுதானே
சகட வாழ்க்கை
மாதவி வாழ்வில்
இன்பம்...
கண்ணகிக்கோ துன்பம்!
கோவலனுடன்
இணைந்து
இன்பத்தில்
மாதவி ..
அவனை பிரிந்து
துன்பத்தில்
கண்ணகி
மணாளனைப்
பிரிந்து
பசலையால்
படரப்பட்டு
செம்மலர்க் கண்களில்
நீர் வழிய
உடல் நடுங்கிய
மாலைப் பொழுது
கண்ணகியுடைத்து
கதிரவனானக்
கணவனைக் காணாது
தவிக்கின்றாள்
மாதவியோ
கதிர் விரிந்து
மாலையில் மலரும்
அல்லி மலராய்
கோவலக்
கதிரவனை
கண்டதால்..
மலர் முகத்தில்
மகிழ்ச்சியால்
இன்பத்துள்
மூழ்குகிறாள்




No comments:

Post a Comment