Monday, March 23, 2020

சிலப்ப்திகாரம் - 5

இந்திரவிழா

---------------------------.


புகார் நகரின்

இந்திரவிழா

மருவூர்ப் பாக்கம்

பட்டினப் பாக்கம்

சார்ந்த பலவகை குடியினர்

ஐந்து மன்றங்களில்

பலிகளையிட்டு

வழிபடும்விழா

விழாக்களிப்பில்

ஊர் முழுதும்

கணவனோடு இணைந்து

மகிழும் மனைவியர்

சிறு சிறு ஊடல்

கொண்டு

கோபமுறும் தம்பதியினர்

பலவேறு கொண்டாட்டங்கள்

எங்கும் மகிழ்ச்சி

எதிலும் மகிழ்ச்சி

ஆயின்

கண்ணகியின் கருங்கண்

பிரிவுத்துயரால்

சோகத்தில்

கண்ணீரை விட

மாதவியின்

செங்கண்களோ

ஆனந்தக்கண்ணிரை

சிந்திட..

அவ்வேளைதனில்

இடக்கண் துடித்தது

நாயகிக்கு

வலக்கண் துடித்தது

ஆசை நாயகிக்கு..

No comments:

Post a Comment