Friday, June 9, 2017

வளையாபதி - 2



மகன் தந்தையைத் தேடிச் சென்றான்

அவரைக் கண்டு, தான் அவரால் கைவிடப்பட்ட அவரது இரண்டாவது மனைவியின் மகன் என்றான்

தந்தையோ அவனை நம்பாமல் அவனை துரத்தியடிக்கிறார்

அவன் தந்தையை வீதிக்கு இழுத்துக் காளியை சாட்சியாக அழைக்கிறான்.தன் தாயின் கற்பினை நிலை நாட்ட வேண்டுகிறான்.காளியின் உதவியால் உண்மையைசெட்டி அறிகிறார்

பின் அவர் மகனை வீரவாணிபன் என்னும் பெயரிட்டு அவனை வாணிகணாகத் தொழில் தொடங்கவும் உதவுகிறான்

இதுதான் வைர வாணிகன் வளையாபதியின் கதைச் சுருக்கமாகும்

ஆனால் வளையாபதி என்ற பெயர் எச்செய்யுளிலும் சொல்லப் படவிலலை

இக்கதையின் தலைவன் சைவ ஐந்தெழுத்தை இறைவணக்க மந்திரமாகக் கொண்டவன். காளியும் ஒரு மையமானப் பாத்திரம்

ஆனால் கிடைத்துள்ள செய்யுள்களோ இது ஒரு சமணநூல் என தெரிவிக்கின்றன

வளையாபதி காத்தவராயன் கதையைப் புராணவடிவத்தில் சொல்லியுள்ளதாக கருதப்படுகிறது.மலையாளத்திலும், தமிழிலும் வழங்கும் காத்தவராயன் கதை சாதி வரம்பை மீறி மணப்பதால் ஏற்படும் துன்பங்களைக் கூறுவது.அதனால் இது ஒரு சமணக்காவியம் என்றும் கூறப்படுகிறது

கிடைத்துள்ள செய்யுள்களை வைத்துப் பார்க்கும் போது , உலக வாழ்வின் இன்பங்களை மறுத்து, துறவறம் போற்றுவதும்,பெண்களின் மீது பொதுவாக வெறுப்பையும் காட்டுவதாகத் தெரிகிறது

பெண் மறுப்பு,சிற்றின்பத் துறவு,புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை போன்றவற்றை இககவியம் கூறுவதால் ..இதன் ஆசிரியர் திறம் மிக்க சமணத் துறவியர் ஆவார்

(ஆதாரங்கள் மயிலை சீனி வெங்கடசாமியின் "மறைந்து போன தமிழ் நூல்கள்)

No comments:

Post a Comment