Friday, June 9, 2017

வளையாபதி - 1



ஐம்பெருங்காப்பியங்களில் நாங்காவதாய் சொல்லப்படுவது வளையாபதி ஆகும்.

வளையாபதியும், குண்டலகேசியும் பற்றி முழுதுமாகக் கிடைக்கவில்லையேயாயினும், வளையாபதியில் ஒன்றுமே கிட்டாமல் இல்லை

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அது தொலையாமல் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.தமிழ்த்தாத்தா எனப் போற்றப்படும் டாக்டர் உ.வே,சாமிநாத ஐயர் அவர்கள், ஒருமுறை திருவாவடுதுறை ஆதின மடத்தின் நூலத்திற்குச் சென்ற போது, வளையாபதியின் சுவடிகளை தம் கண்ணால் கண்டதாகவும், அப்போது, அவர் பழஞ்சுவடிகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபடாடஹ்தால் அதிப் புறக்கணித்து விட்டதாகவும், பின்னர், சுவடிகளைக் காக்கும் விருப்போடு அங்குச் சென்ற போது அவை காணவில்லை என்றும்..."என் சரித்திரம்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்

வளையாபதியின் ஆசிரியர், இயற்றப்பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர் ,ஆகியவை நமக்குத் தெரியவில்லை.ஆனால், அக்காவியத்தின் 72 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன

இது சமண சமய நூல் .தனியழகுள்ள நூல் என ஒட்டக்கூத்தரும் கருதியதாகத் தெரிகிறது.நூல் கிபி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் போது இயற்றப்பட்டிருக்கலாம்

வளையாபதியின் கதைச் சுருக்கம் இதுவே!

வைரவாணிப மகரிசிக் கோத்திரத்தைச் சேர்ந்தவனும், சிவ பக்தனும் ஆன நவகோடி நாராயணச் செட்டி என்பவனுக்கு இரண்டு மனைவியர்

ஒருத்தி, அவனது சாதியான வைசியச் சாதியைச் சார்ந்தவள்.மற்றொருத்தி வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவள்.

வேற்று சாதிக்காரியை மணந்ததால் நவகோடி நாராயணச் செட்டியின் சாதியைச் சேர்ந்தவர்கள் அவரை சாதியை விட்டு ஒதுக்கி வைக்க, அதனால் செட்டி தன் இரண்டாம் மனைவியை , அவள் கர்ப்பமாக இருந்த போதும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.

பின், செட்டியும் கடல் பயணம் செய்து, வாணீபத்தில் மேலும் பொருளீட்டி திரும்பி, தன் முதல் மனைவியுடன் இன்பமாக இல்லறம் நடத்துகிறான்

சில மாதங்கள் கழிந்தது..

அவனது இரண்டாம் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.அவனை அவள் வளர்த்து வருகையில், அவனின் நண்பர்கள், அவன் தகப்பன் பெயர் தெரியாடஹ்வன் என எள்ளி நகையாடி...அவனைத் துன்புறுத்துகின்றனர்

நாளி எனும் காளியின் வடிவமாகிய தெய்வத்தின் அன்பு கொண்ட அவன் தாய் , அவனது தந்தை யார் என்பதை அவனுக்குத் தெரிவிக்கின்றாள்

(தொடரும்)

No comments:

Post a Comment