Saturday, June 10, 2017

குண்டலகேசி - 1



(இக்காப்பியம் பௌத்தம் சார்ந்ததாகும்.தன்னை கொலை செய்ய முயன்ற கணவனைக் கொன்று விட்டு பௌத்த துறவியாக ஆகி அச் சமயத்தின் பெருமைகளைப் பரப்பியவர் குண்டலகேசிஎன்ற பெண். .கிபி 7ஆம் நூற்றாண்டு காப்பியம் இது.

குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்று பெயர்)

காவிரிபூம்பட்டிணத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ மன்னன் கரிகாலன் ஆண்டு வந்தான்

அவ்வூரில் வணிகமணி என்றொரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.அவரது மகளே குண்டலகேசி,பேரழகி.மன்னன் அரண்மனைக்கருகில் ஒரு மாளிகையே அவர்கள் வீடு

அவ்வூரில் வணிகம் செய்து வந்தவன் காளன் (சத்துவான் அவனது இயற்பெயர்).வாணிபத்தில் அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், திருடத் தொடங்கினான்.ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்ட அவனைக் காவலர்கள் கைது செய்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்

தன் வீட்டு மாடியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி அக்காட்சியைப் பார்த்தாள்.

அவன் ஒரு குற்றவாளி என்பது பற்றி சிறிதும் கவலைப் படாமல் , அவன் மீது காதல் கொண்டாள்.அந்த அளவிற்கு அழகானவன் காளன்

மன்னன் முன் நிறுத்தப்பட்ட காளனுக்கு, அரசன் மரணதண்டனை விதித்தான்.மறுநாளே அவனை தூக்கிலிடுமாறு ஆணையிட்டான்.

இதனிடையே குண்டலகேசி , தன் தந்தையிடம்  தன் காதலைச் சொன்னாள்.
தந்தை   அவளைக் கண்டித்தும்...தன் முடிவில் பிடிவாதமாய் இருந்தாள்

No comments:

Post a Comment